தூய கலிமா

பாடம் எண் 3:

பாடத்தின் தலைப்பு: தூய கலிமா

மாணவர் தகுதி: 10 வயது நிரம்பியவர்கள் (6 – வது வகுப்பு)

பாடத்தின் உள்ளடக்கம் (content):

3. தூய கலிமா

தூய கலிமா என்றால் தூய்மையான சொல் என்று பொருள்.

“லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி”

- என்ற இந்த சொற்றொடரே தூய்மையான கலிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த கலிமாவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளது. .

அப்படியானால் இதன் விளக்கம் என்ன?

“லா இலாஹ இல்லல்லாஹ்” – என்பதன் பொருள்

“அல்லாஹ்வைத் தவிர வேறு ‘இலாஹ்’ எதுவும் இல்லை என்பது பொருள்.

‘இலாஹ்’ என்றால் ‘இறைவன்’ என்றும் ‘வணக்கத்துக்குரியவன்’ – என்றும் சுருக்கமாகப் பொருள் கொள்ளலாம். எனினும் இதன் பொருள் மிக விரிவானது.

- வணக்க வழிபாடுகள்

- ஒழுக்க விதிமுறைகள்

- நன்மை எது தீமை எது என்பது பற்றிய அளவுகோள்கள்

- சமூக அமைப்புக்குத் தேவையான சட்டங்கள்

இவ்வாறு மனித வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தீர்மானிக்கின்ற அதிகாரம் – நம் எல்லோரையும் படைத்துப் பாதுகாக்கின்ற, அல்லாஹு தஆலா ஒருவனுக்கே சொந்தம்; வேறு யாருக்கும் இத்தகைய எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பது தான் – லா இலாஹ இல்லல்லாஹ்” – என்பதன் பொருள் ஆகும்.

“முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” – என்பதன் பொருள் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வல்ல அல்லாஹ்வின் திருத்தூதராக விளங்குகிறார்கள் என்பது தான்.

அதாவது – இறைவனிடம் இருந்து பெறப்படுகின்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் உலக மக்கள் அனைவருக்கும்

- வழி காட்டி

- விளக்கமளித்து

- வழி நடத்திச் செல்கின்ற – இறைவனின் தூதராக – முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் விளங்குகிறார்கள் என்பது தான்.

எந்த ஒரு மனிதர் தன்னைப் படைத்த அல்லாஹுதஆலாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இறைத்தூதருக்குக் கட்டுப்பட்டு தன் வாழ்க்கை முழுவதையும் அமைத்துக் கொள்கிறாரோ அவரே ஒரு முஸ்லிம் என்று அழைக்கப்படுவார்.

அது போலவே எந்த ஒரு சமூக அமைப்பு அகில உலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அல்லாஹுதஆலாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இறைத்தூதருக்குக் கட்டுப்பட்டு தன் வாழ்க்கை முழுவதையும் அமைத்துக் கொள்கிறதோ அதுவே இஸ்லாமிய சமூக அமைப்பு ஆகும்.

சுருக்கமாகச் சொன்னால் -

“லா இலாஹ இல்லல்லாஹ்” – என்பது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதையும்

“முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” – என்பது இறைவனுக்கு எவ்வாறு அடிபணிவது என்பதை இறைவனின் திருத்தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமே பெற வேண்டும் என்பதையும் குறிக்கிறது எனலாம்.

பாடம் நடத்தும் வழிமுறை (methodology):

பாடம் நடத்துவதற்கு முன்பு ஆசிரியர் செய்திட வேண்டியவை:

இது தான் இஸ்லாம், இஸ்லாம் உங்கள் பார்வைக்கு போன்ற நூல்களிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொள்தல் சிறப்பு.

இலாஹ், ரஸூல் ஆகிய இரண்டு அரபி மொழிச் சொற்களுக்கும் அகராதியிலிருந்தும், திருக்குர்ஆன் விரிவுரை நூல்களில் இருந்தும் குறிப்புகளை எடுத்துக் கொள்வதும் அவசியம்.

வகுப்பறைக்குள்:

இந்தப் பாடத்துக்கு என்னென்ன கேள்விகள் கேட்கலாம்?

ஒரு முஸ்லிம் மது அருந்துபவனாக இருக்க முடியுமா?

ஒரு முஸ்லிம் நாட்டில் மதுக் கடைகள் இருக்க முடியுமா? வட்டியின் அடிப்படையிலான வங்கிகள் அங்கே இயங்க முடியுமா?

- இன்னும் இது போன்ற கேள்விகளைத் தக்க தருணத்தில் மாணவர்களிடத்தில் கேட்டு அவர்களுடன் அழகிய முறையில் விவாதித்திட வேண்டும். இது போன்ற விவாதங்களில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்பது என் அனுபவம்.

பாடம் நடத்தி முடிந்ததும் கேட்க வேண்டிய கேள்விகள்:

இன்றைய முஸ்லிம்களில் எத்தனை பேர் – “லா இலாஹ இல்லல்லாஹ் – முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” எனும் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்? ஏன் எல்லா முஸ்லிம்களும் அவ்வாறு வாழ்ந்திடவில்லை? அவர்களை அவ்வாறு வாழச் செய்வதற்கு நாம் என்ன செய்யலாம்?

குறிப்பு: தனிப்பட்ட முஸ்லிம் ஒருவரைக் குறிப்பிட்டு அவர் அப்படியில்லை, இப்படியில்லை என்று குறை கூற அனுமதித்து விடக் கூடாது.

இஸ்லாத்தின் அடிப்படை நூல்கள்

பாடம் எண் 2:

பாடத்தின் தலைப்பு: இஸ்லாத்தின் அடிப்படை நூல்கள்

மாணவர் தகுதி: 10 வயது நிரம்பியவர்கள் (6 – வது வகுப்பு)

பாடத்தின் உள்ளடக்கம் (content):

இஸ்லாத்தின் அடிப்படை நூல்கள்

தீன் என்ற அரபிச் சொல்லுக்கு “மார்க்கம்” என்றும் “வாழ்க்கை நெறி” என்றும் பொருள் கொள்ளலாம்.. ஆங்கிலத்தில் இதனை – way of life – என்று சொல்லலாம்.

இஸ்லாம் என்பது எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவினால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு முழுமையான வாழ்க்கை நெறி ஆகும்.

அதாவது – இஸ்லாம் என்பது தனி மனிதர் ஒருவரின் சிந்தனையால் விளைந்த ஒரு தத்துவம் அன்று. அல்லது சில மனிதர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக சிந்தித்து உருவாக்கிய ஒரு கொள்கையும் அன்று.

மாறாக – இஸ்லாம் என்பது இறை நெறி. இறை மார்க்கம்.

இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக அருளப்பட்ட இந்த வாழ்க்கை நெறி உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது.

உலகம் அழியும் காலம் வரை இந்த வாழ்க்கை நெறியின் வழிகாட்டுதல்கள் இறைவனால் முழுமையாக பாதுகாக்கப்படும்.

இந்த வாழ்க்கை நெறியின் வழிகாட்டுதல்களை நாம் இரண்டு ஆதாரங்களின் மூலமாகப் பெற்றுக் கொள்கிறோம்.

ஒன்று – திருக் குர்ஆன் எனும் இறை வேதம்.

மற்றொன்று – சுன்னத் எனும் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை.

வல்ல இறைவன் தனது திருமறையாம் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

“நிச்சயமாக நாம் தான் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். ஆகவே (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனைப் பாது காப்போம்.” (அத்தியாயம்: 15 வசனம்: 09)

அண்ணல் முஹம்மத் (ஸல்) அவர்கள் “சஹாபாக்கள்” என்று அழைக்கப்படும் தங்கள் தோழர்களிடம் கூறுகிறார்கள்:

“உங்களிடம் நான் இரு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பின்பற்றி நடந்தால் ஒரு போதும் வழிகேட்டிலே விழ மாட்டீர்கள். ஒன்று – அல்லாஹ்வின் இறை வேதம். மற்றொன்று அவன் தூதரின் வழிமுறை – சுன்னத். (ஆதார நூல்: முஅத்தா – மாலிக்)

திருக்குர்ஆன் என்பது இறை வாக்கு ஆகும். சுன்னத் என்பது – அதற்கு விளக்கமாக அமைந்த அண்ணல் நபிகளாரின் வாழ்க்கை வழிமுறை ஆகும்.

எனவே இஸ்லாத்தின் அனைத்துக் கொள்கைகளையும், சட்டங்களையும், வழிகாட்டுதல்களையும் – அவற்றின் விளக்கங்களையும் நாம் – பாதுகாக்கப்பட்ட திருமறை வசனங்கள் மூலமாகவும், ஆதாரப்பூர்வமான அண்ணல் நபியின் வாழ்க்கை நடைமுறைகளின் மூலமாகவும் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

உலகின் வேறு எந்த ஒரு மார்க்கத்துக்கும் இப்படி – பாதுகாக்கப்பட்ட வேதமோ, வழிகாட்டுதல்களோ கிடையாது!

பாடம் நடத்தும் வழிமுறை (methodology):

ஆசிரியர் தகுதிகள்:

ஆசிரியர் குர் ஆனை பிழையின்றி ஓதுபவராகவும், அழகாக ஓதிக்காட்டுபவராகவும், குர் ஆனின் சில பகுதிகளையேனும் மனனம் செய்திருப்பவராகவும், திருக்குர் ஆனை மொழிபெயர்த்து விளக்கம் அளித்திட வல்லவராகவும் விளங்கிட வேண்டும்.

பாடம் நடத்துவதற்கு முன்பு ஆசிரியர் செய்திட வேண்டியவை:

ஆசிரியர் “வரலாற்று ஒளியில் இஸ்லாம்” எனும் சிறியதொரு நூலை முழுவதும் படித்துக் கொள்தல் நலம்.

பாடம் நடத்தும் வழிமுறை (methodology):

இங்கே ஒரு கருத்தை வலியுருத்திச் சொல்ல வேண்டியுள்ளது. ஆசிரியர் – இது போன்ற பாடங்களை நடத்தும் போது தான் குறித்துக் கொண்டு வந்துள்ள அனைத்துக் கருத்துக்களையும் ஒரே மூச்சில் மாணவர்களுக்கு முன் ஒப்புவித்து விட மாணவர்கள் அனைவரும் அப்படியே “கைகட்டி வாய் பொத்தி” அமைதியாக கேட்டுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இம்முறைக்கு – ஒரு வழி கருத்துப் பரிமாற்றம் – என்று பெயர். அதாவது – one way communication.

நாம் இங்கே சொல்ல வருவது – இரு வழி கருத்துப் பரிமாற்றம் பற்றி. அதாவது – two way communication.

அதாவது – இந்த முறை – ஆசிரியரும் மாணவர்களும் கூட்டாகப் பங்கு வகிக்கும் கற்றல்-கற்பித்தல் முறையாகும். இம்முறையில், கேள்வி கேட்டல், கேள்விகளை ஊக்குவித்தல், மாணவர்கள் குழுவாக சேர்ந்து விவாதித்தல் எல்லாம் அடங்கும்.

இம்முறையைக் கடிபிடித்திட ஆசிரியருக்குத் தேவை – மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்திடும் விஷயத்தில் அளவு கடந்த ஆர்வம் ஒன்று மட்டுமே!

இஸ்லாம் என்பதன் பொருள் என்ன?

இஸ்லாமியப் பாடங்கள் நடத்துவது எப்படி- என்பதை ஆசிரியர்களுக்கு விளக்குவதற்காக சில பாடங்களையும், அப்பாடங்களை நடத்தும் வழிமுறைகளையும் இங்கே ஒவ்வொன்றாகத் தருகிறோம்.

Subject: இஸ்லாமியக்கல்வி (Islamic studies)

பாடம் எண்1:

பாடத்தின் தலைப்பு: இஸ்லாம் என்பதன் பொருள் என்ன?

மாணவர் தகுதி: 10 வயது நிரம்பியவர்கள் (6 – வது வகுப்பு)

பாடத்தின் உள்ளடக்கம் (content):

இஸ்லாம் என்பதன் பொருள் என்ன?

இறைவன் தான் படைத்த அனைத்துப் படைப்பினங்களுக்கும் ஒவ்வொரு வழியைக் காட்டியுள்ளான்.

இறைவன் விதித்திட்ட பாதையில் இம்மியளவும் பிசகாமல் சுழல்கின்ற காரணத்தினால் கதிரவனும், பூமியும் நிலாவும் மற்ற அனைத்துக் கோளங்களும் -

எந்த ஒரு மோதலும் இன்றி ஆண்டாண்டு காலமாக அமைதியாகவே சுழன்றோடிக் கொண்டிருக்கின்றன.

அது போல, இறைவனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மனித சமூகம் நடை போடத் தலைப்பட்டால் தான், மனித சமூகம் அமைதியைத் தழுவ இயலும்.

இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்!

நம்மைப் படைத்தவன் இறைவன். நாம் எல்லோரும் இறைவனின் அடிமைகள். நம்முடைய எஜமானன் நம்மைப் படைத்த அல்லாஹ் தான்.

எஜமானனுக்குக் கட்டுப்பட வேண்டியது அடிமைகளின் கடமை.

எனவே நாம் அனைவரும் இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கடமைப் பட்டவர்களே.

இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல் என்றும் பொருள்.

இஸ்லாம் என்றால் அமைதி என்றும், கட்டுப்படுதல் என்றும், இஸ்லாம் என்பது “இறை மார்க்கம் – தீன்” என்றும் அறிக!

****

பாடம் நடத்தும் வழிமுறை (methodology):

ஆசிரியர் தகுதிகள்:

இஸ்லாத்தைக் கற்றுக் கொள்வதிலும், மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வம் உள்ளவராக இருந்திட வேண்டும்.

இஸ்லாத்தைப் பின் பற்றுபவராக அவர் இருத்தல் வேண்டும். இறைக்கட்டளைகளுக்கு செயல் வடிவம் தருபவராக இருத்தல் அவசியம்.

பாடம் நடத்துவதற்கு முன்பு ஆசிரியர் செய்திட வேண்டியவை:

குறிப்பிட்ட பாடம் சம்பந்தமான நூல்களிலிருந்து (reference books)குறிப்புகளை எடுத்துக் கொள்தல் வேண்டும். மேற்கண்ட பாடத்தைப் பொறுத்தவரை – இது தான் இஸ்லாம், இஸ்லாம் உங்கள் பார்வைக்கு போன்ற நூல்கள் பெரிதும் உதவும், ஆங்கில நூல்களிலிருந்தும் குறிப்புகள் எடுத்துக் கொள்தல் நலம் பயக்கும். இணைய தளத்திலிருந்தும் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் பாடத்தைப் பொறுத்தவரை வானவியல் (astronomy) பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்தல் நல்லது.

அடுத்து அரபி மொழி அகராதி ஒன்றை எடுத்து – இஸ்லாம் என்ற சொல்லுக்கு மூலச் சொல் என்ன, அதன் பொருள் என்ன என்பதையும் குறித்துக் கொள்தல் அவசியம்.

அடுத்து பாடம் நடத்தும் வழிமுறை குறித்து சிந்தித்து அந்த வழிமுறைக்கு செயல் வடிவம் தருவது குறித்து குறிப்புகள் எழுதிக் கொள்ள வேண்டும். (notes of lesson)

வகுப்பறைக்குள்:

மூன்று விதமாக பாடங்களை நடத்துதல் நலம். பேசி நடத்துதல் (verbal), படம் வரைந்து அல்லது படம் தயாரித்து அவைகளைக் காட்டி நடத்துதல் (visual), செய்து காட்டி நடத்துதல் (activity) ஆகிய மூன்று வழிகளையும் பின் பற்றினால் எல்லா மாணவர்களும் புரிந்து கொள்வார்கள்.

மாணவர்களைக் கேள்விகள் கேட்பது அவசியம். அவர்கள் சொல்லும் பதில் சரியில்லை என்றால் அவர்களை அவமானப் படுத்திடக் கூடாது. மாணவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டிட (motivate) வேண்டும்.

இந்தப் பாடத்துக்கு என்னென்ன கேள்விகள் கேட்கலாம்?

இஸ்லாம் என்றால் என்ன?

முஸ்லிம் என்றால் யார்?

முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் முஸ்லிம்கள் என்பது சரியா?

ஒரு பந்தை மேலே தூக்கிப் போட்டுக்காட்டி அது கீழே விழுந்ததும் – ஏன் பந்து கீழே விழுந்தது என்று கேட்கலாம்.

ஆனால் பந்து போன்ற பூமி கீழே விழாமல் சூரியனை எப்படி சுற்றி வருகிறது என்றும் கேள்விகளைத் தொடரலாம். இவை எல்லாம் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது.

என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்பதையும் முன் கூட்டியே தயாரித்துக் கொள்தல் நலம்.

பாடம் நடத்தி முடிந்ததும் – அவர்கள் பாடத்தின் கருத்தினைப் புரிந்து கொண்டார்களா என்பதை சோதித்து அறிந்து கொள்தல் (evaluation) அவசியம். இதற்கும் சில கேள்விகளைத் தயாரித்துக் கொள்ளலாம்.

ஒரு குடும்பம் அமைதியாக விளங்கிட என்ன செய்திட வேண்டும்?

ஒரு குடும்பத்தில் அமைதி இல்லை என்றால் அதற்கு என்ன பொருள்?

இன்னும் இது போன்ற கேள்விகளை மாணவர்களின் அறிவுக்கு சவாலாக முன் வைக்கலாம். சரியாக பதில் சொல்பவர்களைப் பாராட்டிடத் தவறிடக் கூடாது.

வாழ்த்துக்கள்!

Islam is for all times!

Dear young Muslims! Do you know that Islam is for all times!

Atheists in the West say – the religions had lost its relevance in modern times.

At the same time, if we ask some of our Muslim brothers to observe and follow Islam in various human activities e.g., interest free  transactions in business – they say : “Is it possible to practice Islam in business in these days?”

For those people God’s laws became obsolete in modern times – as if God does not know anything about modern times.

Do you know why these people say like this?

Because it is “difficult” for them to follow Islamic principles nowadays!

This can well be explained with the example quoted by an Islamic scholar Muhammad Naseem: “ Following Islamic principles in modern times is like a  student who tries to go in to the school who forgot his Tiffin box in the school while all other students are coming out of the school in the evening.”

Another Islamic scholar Moulana Mawdudi asks this question: “Islam is a boat. It sails against the stream of water. If you are not willing to be part of the passengers do not blame the boat. Rather than that, let them get away from the boat.”

Some people say that the modern man has no need of any religion which were revealed many centuries before.

The pertinent question here is this:

Whether man has changed in modern times?

No! not at all! His natural disposition can never be changed.

However, we Muslims need to do a lot of research based on the Quran and Sunnah to face the human  challenges of our modern times.

George Bernard Shah in 1936 said the following:

Prophet Muhammad (SAW) would solve all the modern problems!

So, again my dear youth! Do not be disheartened when others intentionally or unintentionally criticize Islam as a religion of the past.

Islam is for all times for the following reasons:

Prophet Muhammad SAW is the last of all the prophets of Allah SWT.

The sources of Islamic religion – Quran and Sunnah are well protected by Allah SWT. No one can corrupt them.

Allah SWT knows every problem of modern man and He only can guide us to solve those problems.

So, what I request you all is to read Islamic books on these points.

நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்.’ (அபூதாவூத்)

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?’ என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன்’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்’ என்று கூறினார்கள். (அபூதாவூத்)

நான்கு செயல்கள் இருக்கின்றன. அவை எவனிடம் குடிகொண்டிருக்கின்றனவோ அவன் கலப்பற்ற நயவஞ்சகனேயாவான். அன்றி அவற்றில் ஒரு செயல் எவரிடம் இருக்கிறதோ அவர் அதனைக் கைவிடாதவரை அவரிடம் நயவஞ்சகத்தன்மை குடி கொண்டிருக்கிறது. அவை: 1) பேசினால் பொய் பேசுவது. 2) அமானிதம் ஒப்படைக்கப்பட்டால் அதனை மோசம் செய்வது. 3) வாக்குறுதி அளித்துவிட்டு அதை மீறுவது. 4) சண்டையிட்டால் ஒருவர் மீது அநியாயமாக பழிசுமத்தி அவதூறு கூறுவதுமாகும்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (புகாரீ, முஸ்லிம்)

நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா? என்று நாங்கள் நபி (ஸல்) அவர்களை வினவினோம். அதற்கு ஆம் என்றனர். கஞ்சனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தனர். பொய்யனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு அவர்கள், இல்லை என்று பதிலளித்தார்கள். (முஅத்தா)

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரை (புதுமணப் பெண்ணை) அழைத்துக் கொண்டு அண்ணலாரின் இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அண்ணலாரின் வீட்டை அடைந்த பொழுது அண்ணலார் ஒரு பெரிய பால் குவளையை எடுத்து வந்தார்கள். பிறகு (அதிலிருந்து பாலை) திருப்தியடையும் அளவிற்குக் குடித்தார்கள். பின் தம் துணைவிக்குக் கொடுத்தார்கள். அத்துணைவியார் பசியிருந்தும் ‘எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினார்கள். அவர்கள் ஒப்புக்கு பதிலளிப்பதைப் புரிந்துகொண்ட அண்ணலார், ‘நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே!’ என்று கூறினார்கள். (தபரானீயின் அல்முஃஜமுஸ்ஸகீர்)

நபி (ஸல்) அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ‘நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.’ (அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடும் தோல்வியும் உண்டாகட்டும்! அவனுக்கு அழிவு காத்திருக்கிறது.’ (திர்மிதி)

‘மக்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது விட்டது. ஈசல் விளக்கில் மொய்த்து மடிவது போன்று நீங்கள் பொய்மைக்குப் பலியாகி விடுகிறீர்கள். பொய்கள் அனைத்தும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் மீது ஹராமாகும் மூன்று செயல்களைத் தவிர. அதாவது: 1) கணவன் தம் மனைவியைத் திருப்தியுறச் செய்ய அவளிடம் பொய் கூறுதல். 2) போரில் ஒருவர் பொய் கூறுதல். 3) இரு முஸ்லிம்களுக்கிடையில் உள்ள பிணக்கை நீக்கும் பொருட்டு ஒருவர் பொய் கூறுவது ஆகும்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

Page 1 of 1712345610...Last »